Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானி ஆடி மூன்றாவது வெள்ளி: ... கிருஷ்ணராயபுரம் மகாலட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகிரி மாவட்டம் அம்மன் கோவில்களில் வரலட்சுமி; ஆடிவெள்ளி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
03:08

பந்தலூர்: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, மாரியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளிலும், உள்ள அம்மன் கோவில்களில், வரலட்சுமி விரதம்; ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில், ஊட்டி மாரியம்மன் கோவில், காந்தல் மூலகரசியம்மன் கோவில், காசி விஸ்வநாத சுவாமி கோவில்; குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில்; காளியம்மன் கோவில், சவுடேஸ்வரியம்மன் கோவில்; துர்க்கை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பந்தலூர் முத்தூர்பிள்ளை மாரியம்மன் கோவில், அத்திக்குன்னா மாரியம்மன் கோவில், நெல்லியாளம் டான்டீ, பந்தலூர் பஜார், அய்யன்கொல்லி மாரியம்மன் கோவில், பொன்னானி, குந்தலாடி மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

சிறப்பம்சமாக, பந்தலூரில் உள்ள பல வீடுகளிலும் பக்தர்கள் அம்மன் உருவம் அமைத்து, கடந்த மூன்று நாட்களாக வரலட்சுமி விரதம் இருந்து, பூஜை செய்ததுடன் சுமங்கலிகளுக்கு சிறப்பு பிரசாதம், மஞ்சள் கயிறு, குங்குமம், துணி உள்ளிட்டவற்றை வழங்கினர்.

கூடலூரில் உள்ள, மேல்கூடலூர் மாரியம்மன் கோவிலில் நடந்த ஆடிவெள்ளி; வரலட்சுமி விரதம்; சுமங்கலி பூஜைகளில், இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், எல்லையோர கேரள மக்களும் பங்கேற்றனர். காலை, 6:00 மணிக்கு துவக்கப்பட்ட சிறப்பு பூஜையின் போது, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், நடந்த சுமங்கலி பூஜையின் போது, சுமங்கலி பிரசாத பொருள்களை, தங்களது முந்தானையில் பெண் பக்தர்கள் பெற்று கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar