பதிவு செய்த நாள்
07
ஆக
2017
10:08
திருப்பதி: திருமலையில், வரும், செப்., 26, 27 தேதிகளில், நன்கொடையாளர்களுக்கு, வாடகை அறைகளை இலவசமாக வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். ஆந்திராவில், திருமலையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வருடாந்திர பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். வரும், செப்., 23 - அக்., 1 தேதிகளில், திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள், திருமலையில் துவங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில், திருமலையில் வாடகை அறைகளை நன்கொடையாக வழங்கிய நன்கொடையாளர்களுக்கு, பிரம்மோற்சவத்தின் போது தேவஸ்தானம், இரண்டு நாட்களுக்கு, இலவசமாக அறை வழங்கி வருகிறது.பிரம்மோற்சவ நாட்களில், அறை தேவைப்படும் நன்கொடையாளர்கள், 4 நாட்களுக்கு முன்பு, cdms.sevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், செப்., 27ல் கருடசேவை நடக்க உள்ளது. அந்நாளில், திருமலையில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், செப்., 26, 27 தேதிகளில் நன்கொடையாளர்களுக்கு திருமலையில் வாடகை அறை வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்தது.