தேவகோட்டை: தேவகோட்டை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயிலில் ஆடித் திருவிழா 3 நாள்கள் நடந்தது. முதல் நாள் விழாவை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தலைவர் லட்சுமணன் கொடியேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆதிபராசக்தி மன்ற தலைவி பெரியநாயகி முன்னிலையில் டாக்டர் பொற்செல்வி வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் செயலர் உண்ணாமலை முன்னிலையில் 108 பெண்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். நிறைவு நாளான நேற்று பொருளாளர் கலா முன்னிலையில், சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் கஞ்சிக்கலய ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 5 ஆயிரம் பெண்கள் கஞ்சிக்கலயம் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக, ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவட்ட நிர்வாக குழு தலைவர் கனக சபை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.