விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் உள்ள புனித வனத்துச் சின்னப்பர் திருத்தலத்தில் 116ம் ஆண்டு பெருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 31ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தினந்தோறும் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. கடந்த 8 ம் தேதி காலை 8:00 மணிக்கு பெருவிழா திருப்பலியும், இரவு 9:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடந்தது. இதில், புதுச்சேரி- கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர், பங்குதந்தை ஆரோக்கியராஜ், பீட்டர் பால்ராஜ், ஆரோக்கிய ஜான் ராபர்ட் உள்பட பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.