பதிவு செய்த நாள்
12
ஆக
2017
10:08
பழநி, ஆடிக்கடைசி வெள்ளியை முன்னிட்டு, பழநி பெரியநாயகி அம்மன்கோவிலில் லட்சார்ச்சனை யாகபூஜை, வெள்ளித் தேரோட்டம் நடந்தது.
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனைவிழா ஜூலை 17ல் துவங்கி ஆக.,10 வரை நடந்தது. ஆடி 1ல் சிவன், விநாயகரிடம் அனுமதி வாங்கி பெரியநாயகிஅம்மன் சன்னதியில் சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து தினமும் மாலை 6:30 மணிக்கு மேல் அம்மனுக்கு நுாறாயிரம் மலர்களால் சிறப்பு லட்சார்ச்சனை மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை லட்சார்ச்சனை வேள்வியில் புனிதநீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், 1008 சகஸ்கர நாம வழிபாடு, சுமங்கலி பூஜை நடந்தது. வெள்ளித் தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரியநாயகியம்மனுக்கு அபிஷேகமும், தங்கக்கவச அலங்காரம் செய்து இரவில், நான்கு ரதவீதிகளிலும் வெள்ளித் தேரோட்டம் நடந்தது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ)மேனகா செய்தனர்.