பழநி: மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் விழாவில், பக்தர்கள் 1008 பால்குடங்கள் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பழநி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்தாண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகம் நடந்தது. பழநி வேணுகோபாலசுவாமி கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் அர்ச்சனை, தீபாராதனை பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.