Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரசித்தி விநாயகர் கோவில் ... அந்தியூர் தம்பிக்கலை அய்யன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கானியம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2017
12:08

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில், கானியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று வெகு விமர்சையாக நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் கானியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலின் தேர்த்திருவிழா, கடந்த, 15ல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 17ல், கொடியேற்றுதல், 21ல், சுவாமி திருக்கல்யாணம், 22ல், வாண வேடிக்கை, பல்லக்கு உற்சவம், மாவிளக்கு எடுத்தல், சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று வெகு விமர்சையாக நடந்தது. பக்தர்கள் கானியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலைச் சுற்றி வந்து நிலை நிறுத்தினர். தேரின் மீது உப்பு, மிளகு, முத்துக்கொட்டை மற்றும் நவதானியங்களை தூவி, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று முதல் வரும், 27 வரை புதுப்பட்டி மற்றும் பாப்பம்பாடியில் தேர்கடை திருவிழாவும், எருது விடுதல், முனி பிடிக்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கானியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அரூர் கிளை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், சேலத்தில் இருந்து ஏ.பள்ளிப்பட்டி, கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வழியாக, வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அரூர் டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி ஆகிய, ஆறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar