பதிவு செய்த நாள்
24
ஆக
2017
12:08
கீழக்கரை, ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. 843ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஜூலை 24 அன்று மாலை தொடங்கியது. ஆக., 2 அன்று அடிமரம் ஊன்றப்பட்டும், ஆக., 3 மறுநாள் வியாழன் மாலை கொடி ஊர்வலமும், கொடியேற்றும் நிகழ்ச்சியும், ஆக., 15 நள்ளிரவு மவுலீது ஓதப்பட்டது, மறுநாள் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேர் கொண்டு வரப்பட்டது. பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை போர்த்தப்பட்டது. நேற்று மாலை 5:00 மணியளவில் யாஷஹீது, முராது ஹாஸில் என்ற கோஷம் முழங்க கொடிக்கம்பத்தில் இருந்து ஷரீப் ஓதி தமாம் செய்து கொடியிறக்கம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும், ஆணையாளர் கே.தேவதாஸ், ஆணைய உதவியாளர் எம்.கே.தமிழரசு மற்றும் ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் பொதுமகா சபையினர் செய்திருந்தனர். கொடியிறக்கத்திற்கு பின்னர் மாலை அனைவருக்கும் நெய்சோறு வழங்கப்பட்டது.