சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, லட்சுமி கணபதி அலங்காரத்தில், சேலம் ராஜகணபதி நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, தேரடி வீதியில் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி கோவில் உள்ளது. கடந்த, 23ல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. தினமும் சிறப்பு அலங்கார ஆராதனை நடந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு அதிகாலை பூஜை நடந்தது. பின்னர், 108 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. மாலை, 6:45 மணிக்கு லட்சுமி கணபதி அலங்காரம் செய்யப்பட்டு, ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.