திருவாடானை, திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆக.29ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி மாரியம்மன் பாடல்களை பாடினர். கோயில் வண்ணமின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.