Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் பவித்ர ... பெரியகுளம் மீனாட்சி அம்மன் கோயிலில் பிட்டு திருவிழா பெரியகுளம் மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருத்வாராவில் முஸ்லிம்கள் தொழுகை : மழையால் மலர்ந்த மத நல்லிணக்கம்
எழுத்தின் அளவு:
குருத்வாராவில் முஸ்லிம்கள் தொழுகை : மழையால் மலர்ந்த மத நல்லிணக்கம்

பதிவு செய்த நாள்

04 செப்
2017
12:09

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில், பக்ரீத் பண்டிகையின் போது, மழை பெய்ததால், மைதானத்தில் தொழுகை நடத்த முடியாமல் தவித்த முஸ்லிம்களுக்கு, சீக்கிய குருத்வாரா நிர்வாகிகள் இடம் தந்து உதவினர். உத்தரகண்ட் மாநிலத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக உள்ளார். இங்குள்ள ஜோஷிமத் நகரில், நேற்று முன்தினம், வழக்கமான உற்சாகத்துடன், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்நகரில் உள்ள காந்தி மைதானத்தில் வழக்கம் போல், பக்ரீத் தொழுகை நடத்த, ஏராளமான முஸ்லிம்கள் கூடினர்; திடீரென மழை பெய்ததால், தொழுகை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

சிறிது நேரம் காத்திருந்தும் மழை நிற்கவில்லை. பலத்த மழையால், மைதானம் சேறும், சகதியுமாக மாறியது; இதனால், அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். இந்நிலையில், அருகில் இருந்த சீக்கிய குருத்வாரா நிர்வாகிகள், தங்கள் வளாகத்தில் கூரை இருப்பதால், அங்கு வந்து தொழுகை நடத்தும்படி அன்புடன் அழைத்தனர். இதை ஏற்று, குருத்வாரா வளாகத்தில், முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, தொழுகை நடத்த இடமளித்த, குருத்வாரா நிர்வாகிகளை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar