Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தீப திருவிழா ... சபரிமலையில் 10ம் தேதி 2 மணி நேரம் அடைப்பு! சபரிமலையில் 10ம் தேதி 2 மணி நேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீபவிழாவில் சிம்மவாகனத்தில் ஸ்வாமி உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 டிச
2011
11:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மூன்றாம் நாளில் ஸ்வாமி சிம்ம வாகனத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார். தீப விழாவில் இன்று உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வந்து அருள் பாலிக்கின்றனர். முதல் பிரஹாரத்தில் உள்ள நந்தியம் பெருமானுக்கு எதிரில் ஆயிரத்து 8 சங்காபிஷேகம் செய்து அருணாசலேஸ்வரருக்கு வழிபாடு நடத்தப்படும். பகல் 10 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்திலும், ஸ்ரீசந்திரசேகரர் பூத வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி, தெய்வாணை சமேதரராய் சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேததரராய் அருணாசலேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.

வெள்ளி உண்டியல்: அருணாசலேஸ்வரர் கோவில், இன்று (டிச.,1) பக்தர்கள் காணிக்கை செலுத்த வெள்ளி உண்டியல் வைக்கப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கார்த்திகை மஹா தீபத்திருவிழா துவங்கியது. ஆண்டுதோறும் மூன்றாம் திருவிழா நாளில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் முன் பக்தர்கள் காணிக்கை செலுத்த வெள்ளி உண்டியல் வைக்கப்படும்.
உண்டியல் வைக்கும் முன் ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து உண்டியல் காணிக்கை செலுத்த செய்வர். உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

இரண்டாம் நாள் விழா: தீபத்திருவிழா இரண்டாம் நாள் விழாவான நேற்று பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். வெள்ளி இந்திர விமானத்தில் ஸ்வாமியும், விநாயகர் முஷிக வாகனத்திலும், ஸ்ரீசந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் வீதி உலா வந்தார். இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வாணை சமேதரராய் முருகர் மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் வெள்ளி இந்திர விமானத்திலும், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி உலா வந்து அருள் பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar