பதிவு செய்த நாள்
06
செப்
2017
12:09
திருப்போரூர்: திருப்போரூர், புகழ் பெற்ற கந்தசுவாமி கோவிலில் திருமணங்கள் வெகுவாக அதிகரித்து வரும் சூழலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 33 திருமணங்கள் நடந்தன. திருப்போரூரில் மட்டும், 68 திருமணங்கள் நடந்தன. இதில், கந்தசுவாமி கோவிலில், 33 திருமணங்கள் நடைபெற்றன. இது தவிர, 50க்கும் மேற்பட்ட, குழந்தைகளுக்கு காது குத்தல் நிகழ்ச்சி இங்கு நடந்தது.திருமணத்திற்காக புதுமண ஜோடிகள் வருகையால், திருப்போரூர் கோவில் பகுதி குலுங்கியது.இதற்காக, கோவில் நிர்வாகம், மேள தாள வாத்தியம், புரோகிதர் கட்டணம், பணியாளர் கூலி, விண்ணப்ப கட்டணம் என, 2,100 ரூபாயை பெறுகிறது.