குன்றத்துார்: குன்றத்துார் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் கிராமத்தில், ஆதி ஜடாமுனீஸ்வரர், சாந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. இந்த கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது. இதை தொடர்ந்து மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றி, நேற்று காலை மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.