கோவை: மருதமலை ஆவணி கிருத்திகை அடியார்கள் அன்னதான கமிட்டியின், 24வது ஆண்டு விழா, இன்று காலை, தான்தோன்றி விநாயகர் கோவிலில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், பால்குடம் மற்றும் ஆதிமூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12:00 மணியளவில் அன்னதானம். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் காவடி ஆட்டம் போன்றவைகளும் நடைபெறுகிறது. விழாவை மருதமலை கிருத்திகை அடியார்கள் ஒருங்கிணைக்கின்றனர்.