பழநி: பழநிக்கு நேற்று முன்தினம் இரவு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுடன் வந்தார். நேற்று, கார்த்திகையை முன்னிட்டு மலைக்கோவிலுக்கு, ’வின்ச்’சில் சென்றார். அங்கு அதிகாலை. 4:00 மணிக்கு நடந்த விஸ்வரூப தரிசனம், விளாபூஜையிலும் பங்கேற்றார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. ’பேட்டரி’கார் மூலம் வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்தார். ”பக்தர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது, சுவாமி கும்பிட வந்துள்ளேன்,” என, விஜயகாந்த் சத்தம் போட்டார். பத்திரிகையாளர்களையும் எச்சரித்தார்.