காரைக்குடி: கோட்டையூர் வேலங்குடி பெரிய நாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா வருகிற 21-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் மாலை 6:00 மணிக்கு சென்னை சகானா சாம்ராஜ் பாட்டும், 22-ம் தேதி ஆர்.ரதிப்பிரியா, 23-ம் தேதி அனாகிதா அபூர்வா, 24-ம் தேதி ஆர்.ஜனனி, 25-ம் தேதி பரத் சுந்தர், 26-ம் தேதி சிக்கல் குருச்சரண், 27-ம் தேதி சுனில் கார்கியன், பாட்டும், 28-ம் தேதி கிருத்திகா பரத்வாஜ் இசை பேரூரையும், 29-ம் தேதி கடலுார் ஜனனியின் பாட்டும் இடம் பெறுகிறது. ஏற்பாடுகளை தலைவர் சுப.துரைராஜ், செயலாளர் அய்க்கண், கணபதி அம்பலம் செய்து வருகின்றனர். அலங்கார வைபவத்தை சிவஸ்ரீசோமு குருக்கள் செய்கிறார்.