Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கார்த்திகை தீப ... அப்பம் வினியோகம் பாதிப்பு : சபரிமலையில் பக்தர்கள் தவிப்பு! அப்பம் வினியோகம் பாதிப்பு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 டிச
2011
11:12

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா கோலாகலமாக துவங்கியது. கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலமான நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டுள்ள ராகுபகவான் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் நாகநாதசுவாமியை திருமால் பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன் முதலிய தேவர்களும், கௌதமர், பராசரர், மார்க்கண்டேயர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டு பேறு பெற்றனர். சிறப்புவாய்ந்த இத்தலத்தில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டும் நேற்று காலை, 8.25 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடிமரம் முன் எழுந்தருள,கொடிமரத்திற்கு நடந்த சிறப்பு அபிஷேகங்களுக்கு பின் கொடியேற்றம் நடந்தது.இந்நிகழ்ச்சயில்ல் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு, 40 அடி உயர கொடிமரத்திற்கு, அத ன் உயரத்திற்கு ஏற்ப, 40 அடி புஷ்ப மாலை அணிவித்து அலங்கரித்து இருந்தனர். இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இன்று முதல் நாள்தோறும் காலை சுவாமி அம்பாள் பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. தினசரி இரவு வெள்ளி ஐந்தலை நாகவாகனம், கிளி வாகனம், பூதம், சிம்மம், கைலாசம், ஓலைச்சப்பரம், யானை, அன்னம், குதிரை, வெண்ணைத்தாழி என பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. டிசம்பர் 8ம் தேதி மாலை 5 மணிக்கு சீர்வரிசை, ஊஞ்சல், மாலை மாற்றுதல் வைபவங்களுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மஞ்சத்தில் புறப்பாடு நடக்கிறது. 10ம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளலும், தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம்பிடித்தலும் நடக்கிறது. விழாவின் முக்கியதிருநாளான, 10ம் நாள் காலை, 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதியுலாவும், தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar