பதிவு செய்த நாள்
19
செப்
2017
01:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை முதல் நவராத்திரி விழா துவங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவராத்திரி திருவிழா, நாளை முதல், வரும், 29 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மன், ஆஸ்தான மண்டபத்திலிருந்து, வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, 21ல் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 22ல் கெஜலட்சுமி அலங்காரம், 23ல் மனோண்மணி அலங்காரம், 24ல் ரிஷபவாகன அலங்காரம், 25ல் ஆண்டாள் அலங்காரம், 26ல் சரஸ்வதி அலங்காரம், 28ல் மகிஷாசூரமர்த்தினி அலங்காரம், அன்று சரஸ்வதி பூஜையும் நடக்க உள்ளது. அன்று மாலையில், உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்க உள்ளது. இதையடுத்து, 29 காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.