Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தரகோசமங்கை கோயிலில் மழைநீர் ... வள்ளியூர் சாமியார் பொத்தையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.25 லட்சத்தில் தங்கும் விடுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2011
11:12

கடையநல்லூர்:ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.25 லட்சம் செலவில் தங்கும் விடுதி அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் நேற்று கடையநல்லூரில் கூறியதாவது:-நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. இந்த தேர்தலில் திமுக டெபாசிட் தொகையை இழக்கும் வகையில் அதிமுகவின் தேர்தல் களம் காணப்படும். தமிழகத்தில் 39 இடங்களில் நவீன ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், பாவூர்சத்திரம், வள்ளியூர் ஆகிய மூன்று இடங்களில் சுமார் 5 கோடி ரூபாய் செலவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படவுள்ளது. இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு பெரும் பலனாக அமையும்.தமிழகத்தில் அமைந்துள்ள பாரம்பரிய மிக்க திருத்தலங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதல்வர் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தென்மாவட்ட மக்களால் திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு அடுத்தபடியாக அதிகமான அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படும் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 25 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் விடுதி அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் அமைக்கப்படவுள்ள தங்கும் விடுதியால் பக்தர்கள் பெருமளவில் பயன் பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைத்திட உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், ஆயக்குடி டவுன் பஞ்.,தலைவர் குட்டியம்மாள், பேரூர் செயலாளர் முத்துக்குட்டி மற்றும் ஆய்க்குடி டவுன் பஞ்., அதிமுக கவுன்சிலர்கள், முருக பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar