பதிவு செய்த நாள்
03
டிச
2011
03:12
பழநி: பழநி மலைக் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காப்புக்கட்டுதலுடன், நேற்று துவங்கியது. சாயரட்சை பூஜையை தொடர்ந்து மூலவர், சின்னக்குமார சுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்புக்கட்டப்பட்டது. உட்பிரகாரத்தில் யாகசாலை பூஜைகள் துவங்கின. சண்முகார்ச்சனை, ஆறுமுகர் தீபாராதனை நடந்தது. விழா, ஏழு நாட்கள் நடக்கும். ஆறாம் நாளான டிச., 7 ல், மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். ஏழாம் நாளில் தீப திரு விழா நடக்கும். அன்று மாலை 4 மணிக்கு, சாயரட்சை பூஜை, 4.30 மணிக்கு சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நடக்கும். உட்பிரகாரத்தில் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டு, மாலை 6.05 மணிக்கு, மலைக் கோயிலில் தீபம் ஏற்றப்படும்; பின், சொக்கப்பனை கொளுத்தப்படும். திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயிலிலும் தீபம் ஏற்றப்படும்.
நடை அடைப்பு: பழநி:டிச., 10 மாலை 6.14 முதல் இரவு 9.47 மணி வரை சந்திரகிரகணம் நடக்கிறது. இதற்காக மாலை 5 மணிக்கு மேல், பழநி மலைக்கோயில் சன்னதி அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கும்; 5 மணிக்கு சன்னதி அடைக்கப்பட்டு, இரவு 9.47 மணிக்குக்கு திறக்கப்படும். பின், இரவு பூஜை நடக்கும். திரு ஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில்களிலும், இதே நடைமுறை பின்பற்றப்படும்.