பதிவு செய்த நாள்
03
டிச
2011
06:12
பழநி: பழநி மலைக்கோயிலுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் கழுதைகளை படிப்பாதை வழியே அனுமதிப்பதால், பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். மலைக்கோயில் கட்டட பணிகளுக்கான பொருட்களை, அடிவாரத்தில் இருந்து எடுத்துச் செல்ல, கழுதைகளை பயன்படுத்துகின்றனர். அன்னதானம், பிரசாத ஸ்டால், படிப்பாதை கடைகளுக்கான பொருட்களும் கழுதைகள் மூலம் செல்கின்றன. இவற்றிற்கு தனி வழித்தடம் இல்லை; படிப்பாதை வழியே, பக்தர்களின் இடையே புகுந்து செல்கின்றன. பக்தர்களின் வருகை குறைவான நேரங்களில், இவற்றால் பாதிப்பு இல்லை. கூட்ட நாட்களில் கழுதைகளை கண்டு, பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தனி ரோப் கார் அமைக்கும் பணி, பல மாதங்களாக நடக்கிறது. விரைவில் செயல்படும் என, கோயில் நிர்வாகத்தினர் கூறிவருகின்றனர். பொருட்களுக்கான ரோப் காரை விரைவில் இயக்க, கோயில் நிர்வாகத்தினர் முயற்சிக்க வேண்டும்.