பதிவு செய்த நாள்
22
செப்
2017
11:09
சபரிமலை: சபரிமலை நடை, 2018-ம் ஆண்டில், 141 நாட்கள் திறக்கப்படுகிறது. ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெறும்.சபரிமலை நடை, 2018ல் திறந்து அடைக்கும் நாள் விபரங்களை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
அதன் படி, ஜன., 14ல் மகரஜோதி விழா நடைபெறும். இதர நாட்கள் விபரங்கள்:
மகரஜோதி விழாவுக்காக, 2017 டிச., 30-ல் மாலை நடை திறக்கப்படும். ஜன., 20-ல் காலை, 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பிப்ரவரி, 12 -- 17; பங்குனி மாத பூஜை, மார்ச், 14 -- 19; பங்குனி உத்திர திருவிழா, மார்ச், 20 -- 30; கொடியேற்று,
மார்ச், 21; ஆராட்டு, மார்ச், 30. சித்திரை மாத பூஜை மற்றும் விஷு, ஏப்., 10 - -18; விஷூ கனி தரிசனம்,
ஏப்., 15; வைகாசி மாத பூஜை, மே, 15 -- 19. ஆனி மாத பூஜை, ஜூன், 14 -- 19; ஆடி மாத பூஜை, ஜூலை, 16 -- 21; ஆவணி மாத பூஜை, ஆக., 16- - 21; திருவோண பூஜை, 23 - 27. புரட்டாசி மாத பூஜை, செப்., 16 -- 21; ஐப்பசி மாத பூஜை, அக்., 16 - - 21; மண்டல கால பூஜைக்காக நடைதிறப்பு, நவ., 16, தொடர்ந்து, 41 நாட்கள் நடை திறந்திருக்கும். எல்லா மாதங்களிலும் நடை திறக்கும் நாளில் மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படும். ஜன., 20 தவிர்த்து, அனைத்து நாட்களிலும் இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.