பதிவு செய்த நாள்
22
செப்
2017
01:09
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதல் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் துர்க்கை அம்மன் அருள்பாலித்தார். இன்று(செப்.,22) முதல் செப்., 30வரை நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், ஊஞ்சல், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தபசு, மகிஷாசுரமர்த்தினி, சிவபூஜை, சரஸ்வதிபூஜை அலங்காரம் நடக்கிறது. செப். 31 அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கக்குதிரை வாகனத்தில் பசுமலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் செப். 30 வரையும், திருநகர் சித்தி விநாயகர் கோயில் மற்றும் வரசித்தி விநாயகர் கோயிலில் செப். 29 வரையும் தினமும் பல்வேறு அலங்காரம் நடக்கிறது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் செப். 30 வரையும், ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் செப்., 29 வரையும் பல்வேறு அலங்காரம் நடக்கிறது. எஸ்.ஆர்.வி., நகர் சீனிவாசா நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் கொலு அலங்காரம் மற்றும் தினமும் மாலை ஆன்மிக சொற்பொழிவு, பட்டி மன்றம் நடக்கிறது.