பதிவு செய்த நாள்
06
டிச
2011
10:12
சென்னை:கார்த்திகை தீபத்தையொட்டி, சென்னை சென்ட்ரல்-திருவண்ணாமலை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சென்னை சென்ட்ரலிலிருந்து, நாளை (7ம் தேதி) மற்றும் 8ம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.06013), பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.இந்த நாட்களில், திருவண்ணாமலையிலிருந்து சிறப்பு ரயில் (எண்.06014) இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.இந்த ரயிலில், எட்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும். பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், கன்னமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் மற்றும் துரிஞ்சாபுரத்தில் நின்று செல்லும் என்றும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தேரோட்டம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது, 63 அடி சயர மஹா ரதத்தில் சண்ணாமுலையம்மன் சமேதராக அருணாசலேஸ்வரர் எழுந்திருளிய தேரை, பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து, மாட வீதி வழியாக வலம் வந்தனர்.