குருவாயூர் : கேரளா திருச்சூர் மாவட்டம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், கார்த்திகை மாத ஏகாதசி உற்சவம் இன்று உதயாஸ்தமன பூஜையுடன் துவங்குகிறது. விரதமிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் அன்னதான மண்டபத்தில், கோதுமை சாதத்துடன் உணவு வழங்கப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நாளை துவாதசி நாளில், துவாதசி பணம் அர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவுறும். கடந்த 53 மணி நேரமாக, திறக்கப்பட்டிருக்கும் கோவில் நடை, நாளை (7ம்தேதி) காலை 8 மணிக்கு அடைக்கப்படும்.