முருகன் கோவில் வளாகத்தில் ரூ.3 லட்சத்தில் காட்சி கோபுரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2011 11:12
மஞ்சூர் : பக்தர்களின் வசதிக்காக அன்னமலை முருகன் கோவில் வளாகத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பழனி என்றழைக்கப்படும், மஞ்சூர் முருகன் கோவிலில் மாதம் தோறும் நடக்கும் கிருத்திகை பூஜை, ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும் காவடி பெருவிழா சிறப்பு வாய்ந்தவையாகும். இக்கோவிலில் காட்சி முனை கோபுரம் அமைக்க வேண்டும் என கோவில் ஸ்தாபகரிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோவில் ஸ்தாபகர் சார்பில் கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற பேரூராட்சி நிர்வாகம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மன்ற கூட்டத்தில், காட்சி முனை கோபுரம் அமைக்க 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் கோபுரத்தின் திறப்பு விழா நடைபெறும் என கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தெரிவித்தார்.