Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனைவியின் ஆயுள் அதிகரிக்க என்ன பூஜை ... கருப்பாக மாறினால் ஆபத்து! கருப்பாக மாறினால் ஆபத்து!
முதல் பக்கம் » துளிகள்
நெருப்புக்கு பூஜை நடக்கும் அம்மன் கோயில்
எழுத்தின் அளவு:
நெருப்புக்கு பூஜை நடக்கும் அம்மன் கோயில்

பதிவு செய்த நாள்

03 அக்
2017
01:10

பஞ்சாப் மாநிலம் காங்கரா மாவட்டத்தில் உள்ள ஜ்வாலாமுகி’ அம்மன் கோயிலில் சிலைக்கு பதிலாக, தீ கொழுந்து விட்டு எரிகிறது.  சிவனின் மாமனாரான தட்சன் யாகம் நடத்திய போது, மருமகனை அழைக்கவில்லை. இதைத் தட்டிக்கேட்க சென்ற மகள்  தாட்சாயிணியை (பார்வதி) அவமானப்படுத்தினான். யாகத்தை நிறுத்த தாட்சாயிணி வேள்வி குண்டத்தில் குதித்து உயிர் விட்டாள்.  உடனே சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்தார். பின், மனைவியின் உடலை சுமந்து கொண்டு தாண்டவம்  ஆடினார். அப்போது, அவளது ஒவ்வொரு அங்கமும் பூலோகத்தில் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது. அவை விழுந்த இடங்களில்  சக்திகோயில்கள் எழுந்தன. அவையே சக்தி பீடங்கள் எனப்படுகின்றன. அதில் நாக்கு விழுந்த இடம் ஜ்வாலாமுகி. நாக்கில் இருந்து வெளிப்படும் மோசமான வார்த்தைகள் தீ போல சுடும். இதையே திருவள்ளுவர், “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்கிறார்.நாக்கு விழுந்த இடம் என்பதால், அதை நெருப்புக்கு ஒப்பிட்டு, மூலஸ்தானத்தில் நெருப்பை அம்பாளாக பிரதிஷ்டை செய்து விட்டனர். அக்பர் காலத்தில் வாழ்ந்த அபுல் பாஸல் என்பவர், தன் அயினி அக்பரி’ நுாலில், இந்தக் கோயிலின் சிறப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில், மக்கள் தங்கள் நாக்கையே இந்த அம்பாளுக்கு காணிக்கையாகக் கொடுத்ததாக சொல்லியுள்ளார். இந்தக் கோயில் கோபுரம் தங்கத்தால் ஆனது. கதவுகளுக்கு வெள்ளி தகடு பொருத்தப்பட்டுள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபட உகந்த நாளாகும், தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar