பதிவு செய்த நாள்
10
அக்
2017
12:10
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, தும்மங்குறிச்சி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தங்கள் பிரிவை சேர்ந்த மக்களுக்கும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் ஆசியா மரியத்திடம், அந்த பிரிவு இளைஞர் பேரவையினர் மனு அளித்தனர். மனு விபரம்: தும்மங்குறிச்சியில், எங்கள் பிரிவை சேர்ந்த, 200 குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்குள்ள கூத்தாண்டம்மன் கோவிலில், வரும், 15ல் காப்பு கட்டி, 22ல் திருவிழா நடக்கவுள்ளது. இந்நிலையில், நாங்கள் சார்ந்துள்ள பிரிவில் மட்டும், வரி வசூல் செய்யாமல், எங்களை கலந்து கொள்ளக்கூடாது என்று கூறி, முடிவு செய்துள்ளனர். திருவிழாவில் கலந்து கொள்ள வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.