Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 9 டன் பஞ்சமுக சிவன் சிலை ... திருத்தணி மகிஷாசுரமர்த்தினிக்கு பாலாபிஷேகம் திருத்தணி மகிஷாசுரமர்த்தினிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் கலப்பட நெய் தீபத்திற்கு தடை: உயர்நீதிமன்றத்தில் தகவல்
எழுத்தின் அளவு:
கோயில்களில் கலப்பட நெய் தீபத்திற்கு தடை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

பதிவு செய்த நாள்

11 அக்
2017
11:10

மதுரை: ‘‘கலப்படம், கெமிக்கலால் தயாராகும் பூஜை பொருட்களை தடை செய்ய தாக்கலான வழக்கில், ‘கோயில்களில் கலப்படத்துடன் நெய் தீபம் என்ற பெயரில் விற்க, வேதிப் பொருட்களால் உருவாக்கிய கற்பூரம், பிளாஸ்டிக்  பைகளில் பூஜை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

சிவகங்கை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் ஆனந்தவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: கோயில்களில் கற்பூரம், சாம்பிராணியில் போலி கெமிக்கல் கலந்துள்ளன. இதனால் சுற்றுச்சூழல், உடல்நலம் பாதிக்கிறது. வனஸ்பதி, கலப்பட எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு கலந்த எண்ணெயை நெய் தீபம் என்ற பெயரில் விற்கின்றனர். போலிசந்தனம், குங்குமத்தால் தெய்வ சிலைகள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அனைத்து கோயில்களையும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மண்டலமாக அரசு அறிவிக்க இடைக்கால உத்தரவிட வேண்டும். கலப்படத்தால் தயாரிக்கப்பட்ட நெய்தீப பொருட்கள், கற்பூரம், சாம்பிராணி, பத்தி விற்பனையை கோயில்களில் தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆனந்தவேல் மனு செய்திருந்தார். நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர்: கோயில்களில் கலப்பட எண்ணெயுடன் நெய் தீபம் என்ற பெயரில் விற்க, வேதிப் பொருட்களால் உருவாக்கப்பட்ட கற்பூரம், பிளாஸ்டிக் பைகளில் பூஜை பொருட்கள் விற்க தடை விதிக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நெய் தீபத்திற்கு தேவையான அகல் விளக்கு, திரி, நெய் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, கோயில் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. நெய் தீபம் விளக்கு ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கோயில் மூலம் நெய் தீபம் விற்பனை செய்யும் போது, எண்ணெய் உறிஞ்சும் தாள் வழங்கவும், அதை பயன் படுத்திய பின் போட குப்பைத் தொட்டி ஏற்பாடு செய்ய வேண்டும். கோயில்களில் கற்பூரம் ஏற்றுதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல் தொடர்பாக ஏற்கனவே, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதன்படி செயல்படுத்தாத கோயில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார் என்றார். நீதிபதிகள், ‘தமிழக சுகாதாரத்துறை செயலாளர், அறநிலையத்துறை கமிஷனர் நவ.,7 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar