பதிவு செய்த நாள்
11
அக்
2017
01:10
திருவண்ணாமலை: ”திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவை, பக்தர்களுக்கான விழாவாக கொண்டாட வேண்டும்,” என, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் கூறினார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பத்து நாட்கள் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது. சில ஆண்டுகளாக, பாதுகாப்பை காரணம் காட்டி, மஹா தீப திருவிழாவிற்கு, மூன்று நாட்கள் முன்னதாகவே, மாட வீதியில் பக்தர்களை செல்ல விடாமல் கெடுபிடி செய்கின்றனர். சம்பிரதாய அரசு விழாவாகவே, தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை தவிர்த்து, திருப்பதி பிரம்மோற்சவ விழா போல், நகரில் ஆங்காங்கே அலங்கார வளைவு, தோரணங்கள் கட்டி, தீப திருவிழாவை களை கட்டச்செய்து, பக்தர்களுக்கான விழாவாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.