Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடர்நீக்கும் இடைக்காட்டூர் சித்தர் ... கவுமழை மாரியம்மன் கோயில் திருவிழா கவுமழை மாரியம்மன் கோயில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

12 அக்
2017
11:10

வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசித்தனர். இப்பகுதி நீர்வளம், நிலவளம் உட்பட சகல வளங்களும் பெற்று செழிப்புடன் விளங்க காரணம், மழைக்கு அதிபதியாக உள்ள முத்தாலம்மன்தான் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் அம்மனுக்கு விழா எடுத்து வழிபடுவது வழக்கம். இப்பகுதியை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டு வழிபடுவார்கள். இந்தாண்டு திருவிழா செப்.4 ல் ஜாதி, மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழியுடன் துவங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் கலைவிழா நடந்தது. இறுதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

நேர்த்திக்கடன்: இதை தொடர்ந்து அதிகாலையில் அம்மன் தேரில் எழுந்தருள,. சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க துவங்கினர். மாவிளக்கு எடுத்தும், பழங்களை சூறையிட்டும், ஆடுகளை பலியிட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தேர் நிலை வந்தடைந்தபோது அம்மனை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். தேரில் இருந்த அம்மனை துாக்கி ஊர்வலமாகச் சென்று கோயிலுக்குள் எழுந்தருளச்செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றியும், மண் பொம்மைகள், கலயங்களை ஊர்வலமாக சுமந்து கோயிலில் செலுத்தி வழிபட்டனர். பின்னர் மஞ்சள்நீராட்டு , மாவிளக்கு வழிபாடுடன், அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது.

பிரியாவிடை நிகழ்ச்சி: அம்மன் முதல்நாள் இரவு தோன்றி மறுநாள் இரவு மறைவதால், அம்மனை ஆற்றுநீரில் கரைப்பதற்காக கொண்டு செல்லும் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் கோயிலை மூன்றுமுறை சுற்றி வந்த போது பக்தர்கள் பூக்களை துாவியும், குலவையிட்டு அம்மனை வழியனுப்பி வைத்தனர். சுற்று கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் சுந்தர்ராஜன், திருவிழா பாத்தியதாரர்கள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar