கரூர்: சத்குரு பாட்டி சித்தரின், இரண்டாமாண்டு குருபூஜை விழா, தான்தோன்றிமலை மயானத்தில் நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு திருவாசகம் ஓதுதல் நிகழ்ச்சியுடன் குருபூஜை துவங்கியது. மதியம், மகேஸ்வர பூஜை மற்றும் மஹாதீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜை விழாவில், கரூர் ஆர்.டி.ஓ., சரவண மூர்த்தி உள்பட, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.