பதிவு செய்த நாள்
12
அக்
2017
12:10
நகரி : காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உண்டியலில், 48.53 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை கிடைத்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை, பக்தர்கள் உண்டியலில் செலுத்துகின்றனர். கடந்த, 18 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி, பூர்ணசந்திர ராவ் முன்னிலையில், கோவில் ஊழியர்கள், காணிக்கையை எண்ணினர்.இதில், 48.53 லட்சம் ரூபாய் ரொக்கம், 40 கிராம் தங்கம், 335 கிராம் வெள்ளி மற்றும், 341 வெளிநாட்டு நாணயங்கள் இருந்தன. தங்க ரதம் செய்ய, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட உண்டியலில், 8.60 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.