Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொன்காளி அம்மன் கோவில் உண்டியலில் ... தினமலர் செய்தி எதிரொலி காஞ்சிபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை தீப அகல் விளக்கு உற்பத்தி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2017
01:10

அதியமான்கோட்டை: கார்த்திகை தீப விழாவுக்காக, அகல் விளக்கு தயாரிக்கும் பணியில், தர்மபுரி மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கார்த்திகை தீப திருவிழா உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, பொதுமக்கள் கொண்டாடினர். தற்போது, நாகரீக மோகத்தால், பலர் பீங்கான் விளக்கு மற்றும் தீப வடிவில் ஆனா மெழுகுவர்த்திகளில் தீபம் ஏற்றி வருகின்றனர். இதனால், மண் அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இன்னும் பலர், பழமை மாறாமல், களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கில் தீபம் ஏற்றி, வழிபட்டு வருகின்றனர். இதனால், களி மண்ணில் அகல் விளக்கு செய்யும் பணியில், தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள், ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அகல் விளக்கு தயாரிக்கும், அதியமான்கோட்டையை சேர்ந்த செல்வம் கூறியதாவது: கார்த்திகை தீப விழா என்றால், பழமை மாறாமல், களி மண்ணால் ஆன அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, வழிபட்டு பக்தர்களால், எங்களின் மண்பாண்ட தொழில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல், இந்தாண்டும், 50 முதல், 250 மில்லி வரை கொள்ளளவு கொண்ட அகல் விளக்கு தயார் செய்ய, வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர் வந்துள்ளது. இதனால், அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பருவமழையால், கார்த்திகை விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு, எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். பருவமழை காலத்தில் பாதிக்கப்படும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar