பதிவு செய்த நாள்
30
அக்
2017
03:10
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த முடிகண்டநல்லுார் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த முடிகண்டநல்லுார் கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீமதுரகாளியம்மன், ஸ்ரீபாலவலஞ்சுழி விஞாயகர், ஸ்ரீபாலமுருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று 29 ம் தேதி மாலை 6.00 மணிக்கு வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்பணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜைகள் ஆரம்பமாகி இரவு 9.00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து 30ம் தேதி காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் பிம்பசுத்தி, ரஷாபந்தனம், வேதிகார்ச்சணை, ஸ்பரிசாகுதி, தத்துவார்ச்சணை, நாடிசந்தானம், திரவிய ேஹாமம், மகா பூர்ணாகுதி தீபாராதனையும், யாத்ரதானம் கடம் புறப்பாடாகி 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம் கலசத்தில் புனித கங்கை நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீமகாமாரியம்மன், ஸ்ரீமதுரகாளியம்மன், ஸ்ரீபாலவலஞ்சுழி விஞாயகர், ஸ்ரீபாலமுருகன் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை முடிகண்டநல்லுார் கிராம பொதுமக்கள் செய்தனர், இதில், சுற்றியுள்ள கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.