பதிவு செய்த நாள்
01
நவ
2017
05:11
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை 4:30 மணிக்கு எண்ணெய், சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்ட 12 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.