பதிவு செய்த நாள்
06
நவ
2017
12:11
சத்தியமங்கலம்: ஜடேருத்ரசாமி தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சத்தியமங்கலத்தை அடுத்த, ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள, கேர்மாளம் அருகே, சிக்குன்சேபாளையம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஜடேருத்ரசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு திருவிழா, கடந்த, 1ல் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, ஜடேருத்ரசாமி மற்றும் கும்பேஸ்வர சுவாமிக்கு எண்ணெய் மஞ்சன சேவை, தீப அலங்காரம், பால்குடம் எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி உலா நடந்தது. இதில் கேர்மாளம், கெத்தேசால், கோட்டாடை, மாவள்ளம், கடம்பூர், ஆசனூர் மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், ஹனூர், உடையார்பாளையம், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நாளை மறு பூஜை நடைபெறுகிறது.