கம்மாபுரம்: ஐப்பசி மாத சஷ்டியையொட்டி, கம்மாபுரம் பகுதி சுப்ரமணியர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, கம்மாபுரம் சுப்ரமணியர் கோவிலில் காலை 8:30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் வழிபாடு செய்தனர். அதேபோல், சி.கீரனுார், புதுவிருத்தகிரிகுப்பம், விளக்கப்பாடி சுப்ரமணியர் கோவில்களில், சஷ்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.