பதிவு செய்த நாள்
16
நவ
2017
01:11
ஈரோடு: பிரதோஷத்தை முன்னிட்டு, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா, நேற்று மாலை வெகு விமர்சையாக நடந்தது. மூலவர் மற்றும் நந்திக்கு திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், பழங்கள், நெய், பால், தயிர், எலுமிச்சை பழச்சாறு, இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், பன்னீர், புஷ்பம், விபூதி உள்ளிட்ட, 16 திரவியங்களில் அபி ?ஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. விழா மண்டபத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமா மகேஸ்வரர், பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தில்லைநகர், வாசுகிவீதி, திருவள்ளுவர் வீதி, அகில்மேடுவீதி, பிருந்தாவீதி, தெப்பக்குளம், காமராஜர் வீதி உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.