பதிவு செய்த நாள்
16
நவ
2017
01:11
வேலுார்: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்களுக்கு நேரடியாக அன்ன தானம் வழங்க விதித்த தடைக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தன் உத்தரவை, கலெக்டர் திரும்ப பெற்றுக்கொண்டார்.தி.மலை அண்ணாமலையார் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா, டிச., 2ல் நடக்கிறது. அன்று, பக்தர்களுக்கு நேரடியாக அன்னதானம் வழங்க, கலெக்டர், கந்தசாமி தடை விதித்தார்.மாவட்ட நிர்வாகத்திடம் பணம் கொடுத்தால்,தாங்களே அன்னதானம் வழங்குவதாக தெரிவித்தார்.இந்த அறிவிப்புக்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, தன்உத்தரவை, கலெக்டர் திரும்ப பெற்றார்.இது குறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தீபத் திருவிழாவின் போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு, நாளை முதல், 25 வரை, தி.மலை கலெக்டர்அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி உதவிஇயக்குனர் -ஊராட்சிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அடையாள அட்டைபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத் துடன், ஐந்து பாஸ்போர்ட் புகைப்படம்,முகவரியை தெரிவிக்கும் அங்கீகார அடையாள அட்டையின் நகலை இணைக்க வேண்டும். அனுமதி வழங்கப்படும் இடம் மற்றும் தேதியில், அன்னதானம் வழங்கி முடிக்க வேண்டும்.பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. தொண்ணை மற்றும் பாக்கு மட்டையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவுப் பொருட்களை போடுவதற்கு ஏதுவாக, குப்பைக் கூடைகளை, அன்னதானம் வழங்குபவர்களே எடுத்து வர வேண்டும். அனுமதி இல்லாமல் அன்னதானம் வழங்குபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.