கார்த்திகை சோமவாரம்: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2017 11:11
உடுமலை : கார்த்திகை சோமவாரத்தையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெற்றது.
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சங்காபிஷேக விழா நடந்தது. கார்த்திகை மாத திங்கள்கிழமையையொட்டி, பிரசன்ன விநாயகர் கோவிலில், 108 வலம்புரி சங்காபிஷேக விழா காலை, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. கலசபூஜை மற்றும் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காசி விஸ்வநாத சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. 108 வலம்புரி சங்குகளுக்கு அபிஷேகத்திற்காக அலங்காரம் செய்து, சங்காபிஷேகம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.