பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
நாமக்கல்: நாமக்கல், தட்டாரத்தெரு, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை, தீபாராதனை, நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, வேத பாராயணம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடு நடந்து சுவாமி, அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், குங்குமம், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்துடன் அபி ?ஷகம் நடந்து, தீபாராதனை செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சுவாமிகள் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, விழா குழுவினர், பக்தர்கள் செய்திருந்தனர்.