Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலுக்குள் பிரவேசிக்கும் சூரிய ... உடுமலை கோவிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேக பூஜை உடுமலை கோவிலில் கார்த்திகை சோமவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவல் தெய்வமாய் சப்த முனிகள்
எழுத்தின் அளவு:
காவல் தெய்வமாய் சப்த முனிகள்

பதிவு செய்த நாள்

05 டிச
2017
12:12

மடத்துக்குளம்: கிராம காவல் தெய்வமான முனியை பல உருவங்களில் வணங்கும் சப்தமுனி கோவில் மடத்துக்குளம் அருகே உள்ளது.வழிபாடுகள் தொடங்கிய காலம் முதல், இருள், விலங்குகள், தீயசக்திகள் குறித்த அச்சம் மக்களிடையே இருந்தது. இந்த அச்சத்திலிருந்து, விடுபட பலவித காவல் தெய்வங்களை உருவாக்கி வணங்கத் தொடங்கினர். கிராமம் சார்ந்த பகுதியில் வசித்த மக்கள் கருப்பணசுவாமியையும், வனம் சார்ந்த மக்கள் முனி போன்ற தெய்வத்தை தங்களை பாதுகாக்கும் இறைசக்தியாக நம்பினர்.தீய சக்திகளை எதிர்த்து போராட மிகுந்த பலம் தேவை என்பதால், காவல் தெய்வங்களை சாதாரண மக்களை விட அதிக பலம் உள்ளதாக உருவகப்படுத்தினர். கட்டுமஸ்தான உடல், பிரமாண்ட உருவம், கைகளில் ஆயுதம், மிரட்டும் விழிகள், கோபம் பொங்கும் முகம் என இந்த தெய்வம் பார்ப்பவர்களை அச்சப்பட வைக்கும் தோற்றம் கொண்டதாக உருவாக்கப்பட்டது.

இந்த தோற்ற அமைப்பில் முனிகளுக்கு சிலைகள் உள்ளன.கிராமம் மற்றும் காடுகளில் மக்கள் வசித்த எல்லை பகுதியில் முனிகளுக்கு கோவில் அமைக்கப்பட்டது. பெரும்பாலும், இறைச்சியை, சமைத்து படையலிட்டு வணங்குவது பலகாலமாக பின்பற்றப்படுகிறது. சில கோவில்களில் சைவ படையலும் நடக்கிறது. பொதுவாக முனி என்பது ஒரு காவல்தெய்வமாகவே வழிபடுவார்கள். மடத்துக்குளம் அருகே சப்த முனிகளுக்கு கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.ஏழுமுனிகளின் சிலைகள் அமைக்கப்பட்டு, இதை சப்த முனி என குறிப்பிடுகின்றனர். பல தோற்றங்களில் உள்ள இந்த முனிகள், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் அம்சங்களாக குறிப்பிடப்படுவதோடு, சில முனிகள் பில்லி, சூனியம் அகற்றுவதாகவும், சில முனிகள் சகல ஐஸ்வர்யம் வழங்குவதாகவும் மக்கள் நம்புகின்றனர். அனைத்து முனி சிலைகளும் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளன. கையில் கத்தி,வேல், போன்ற ஆயதங்கள் உள்ளன. அப்பகுதி மக்கள் கூறுகையில், பல தலைமுறையாக சப்தமுனி வழிபாடு இங்கு நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவில் புதுப்பிக்கப்பட்டது, என்றனர்.மடத்துக்குளம் - கொமரலிங்கம் ரோட்டில், மேற்கு நீலம்பூர் பஸ்ஸ்டாப் அருகே ரோட்டோரம் இந்த கோவில் அமைந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar