பதிவு செய்த நாள்
05
டிச
2017
01:12
முருங்கப்பட்டி: சேலம், முருங்கப்பட்டி, நல்லாகவுண்டனூர், பெத்தாம்பட்டி ஊர்மக்கள் சார்பில், புதிதாக, மகா கணபதி மற்றும் கட்டேரியப்பன் சுவாமிக்கு, கோவில் கட்டி, கடந்த, 30ல் கும்பாபி?ஷகம் நடந்தது. அந்த கோவில்களில், நேற்று, மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி, தினமும் மூலவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தி, மாலை, பூஜை செய்யப்படும். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், கோவில் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். நிறைவு நாளில், அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், ஊர்மக்கள் செய்துள்ளனர்.