Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பந்தலுார் தேவாலய தேர் திருவிழா ... பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் தீபத்திருவிழா பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தின் 2வது விபூதி லிங்கம்: ஊத்துமலை குகையில் பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
தமிழகத்தின் 2வது விபூதி லிங்கம்: ஊத்துமலை குகையில் பிரதிஷ்டை!

பதிவு செய்த நாள்

05 டிச
2017
05:12

சேலம்: தமிழகத்தின் இரண்டாவது, விபூதி லிங்கம், சேலம், ஊத்துமலை முருகன் கோவிலில் உள்ள குகையில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிரிவலப்பாதையில், உள்ள குகையில், சித்தர்கள் உருவாக்கிய விபூதி லிங்கம் உள்ளது. அதன் பாதுகாப்பு கருதி, பக்தர்கள் தரிசிக்கவும், வழிபாடு மேற் கொள்ளவும் அனுமதிக்கப்படுவது இல்லை. அந்த லிங்கத்தை போன்று, தமிழகத்தின் இரண்டாவது விபூதி லிங்கம், சேலம், ஊத்துமலை முருகன் கோவிலில் தயார் செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்வதற்காக, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.   

இது குறித்து திருஞான சம்பந்த ஈசான சிவாச்சாரியார் கூறியதாவது:  நோய் தீர்க்கும் அத்தனை சக்தியும் விபூதியில் உள்ளது. திருச்செந்தூரில், பன்னீர் இலையில் வழங்கப்படும் விடுதி, அனைத்து வகையான நோய்களையும் தீர்த்து வைக்கிறது. அதே போல், சித்தர்கள் வகுத்து கொடுத்த நெறிமுறைகளின் படி, விபூதியில் தயார் செய்யப்படும் சிவலிங்கம், ஆஸ்துமா, சோரியாசிஸ், காசநோய், மன அழுத்தம் உட்பட அனைத்து வகையான நோய்களையும் தீர்க்கும் சக்தியை கொண்டுள்ளது. இந்த லிங்கம், 15 கிலோ விபதியுடன், ரத்தினம், பவளம், மரகம், அன்ன சூரணம் உட்பட, 16 வகையான திரவியங்கள், மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றரை அடி உயரத்திலும், அரை அடி சுற்று வட்டத்தையும் கொண்ட லிங்கம், 16 கிலோ எடையை கொண்டுள்ளது.  லிங்கத்துக்கான, அடிபீடம் தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டது. குகையையும் தேர்வு செய்துள்ளோம். அதில், சில பணிகள் முடித்த பின், முறைப்படி பிரதிஷ்டை செய்ய உள்ளோம். அதற்கு முன்பாக, விபூதி லிங்கத்துக்கு சிறப்பு பூஜை நடந்து  வருகிறது.  சித்தர்கள் ஏற்படுத்திக் கொடுத்த இந்த விபூதி லிங்கத்துக்கு, மாதம் தோறும் பெளர்ணமி நாளில் சிறப்பு பூஜை நடத்தப்பட உள்ளது. திருவண்ணாமலையில், விபூதி லிங்கம் உள்ள போதிலும், அதை பக்தர்களால் காணவோ, தரிசிக்கவோ முடிவது இல்லை. ஆனால், இங்கு விபூதி லிங்கத்தை வழிபட பக்தர்களுக்கு முழு அனுமதி வழங்கப்பட உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar