Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஐயப்பன் கோவிலில் மண்டல ... மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கையில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை
எழுத்தின் அளவு:
சிவகங்கையில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை

பதிவு செய்த நாள்

07 டிச
2017
11:12

சிவகங்கை: சிவகங்கை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர் சிலையை தொல்லியல் துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மகிபாலன்பட்டி, இளையான்குடி, பிரான்மலை, குன்றக்குடி, திருக்களாக்குடி, பூலாங்குறிச்சி, திருமலை, அனுமந்தங்குடி உள்ளிட்ட இடங்களில் சமணர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளன. புத்த மதத்தினர் வாழ்ந்ததாக கூறப்பட்டாலும், அதற்கான அடையாளம் கண்டுபிடிக்காமல் இருந்தன.தற்போது சிவகங்கை அருகே மல்லல் புஞ்சை காட்டு பகுதியில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கற்சிலையான இது 10 ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. அமர்ந்தபடி தியான நிலையில் புத்தர் உள்ளார். மூன்றடி உயரமும், இரண்டே கால் அடி அகலமும் கொண்டது. பல ஆண்டுகள் பராமரிப்பின்றி இருந்ததால் முகம் பாவனைகள் மறைந்து உள்ளன. வலதுபுற காதும் சேதமடைந்துள்ளது.அந்த சிலையை தொல்லி யல்துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

மல்லல் ஆர்.பாக்யநாதன் கூறியதாவது: கோயில் கட்டி புத்தர் சிலை வைக்கலாம் என, எண்ணியிருந்தோம். சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயில் கட்டவில்லை. வெயில், மழையில் சிலை சேதமடைந்து வருகிறது, என்றார். சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் டி.பக்கிரிசாமி கூறியதாவது: கிராம மக்கள் தகவல் அடிப்படையில் சிலையை ஆய்வு செய்தோம். புத்தர் சிலைக்கான அடையாளங்கள் உள்ளன. புத்தர் சிலைகள் பொதுவாக தியான நிலையில் தான் இருக்கும். இது பத்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. அதை அருங்காட்சியகத்திற்கு கொண்டு வர கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar