அரியானூர்: கணபதி கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சேலம், அரியானூர் பிரிவில் உள்ள, மகா கணபதி கோவிலில், நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. மாலையில் நடந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். அதேபோல், பெத்தாம்பட்டி கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.