மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை குளிக்க ஷவர்: பக்தர் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2017 06:12
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோயிலின் யானை அம்பாளின் பெயரிலேயே அபயாம்பாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த யானையை கோயில் திருக்குளம் அருகிலேயே தனிஇடத்தில் போர்வெல் நீரில் குளிப்பாட்டி வந்தனர். இந்நிலையில் தினமும் யானையை குளிப்பாட்ட யானை பாகன் சிரமப்படுவதை கண்ட பக்தர் ஒருவர், யானைக்கு புதிதாக ரூ.20ஆயிரம் செலவில் ஷவர் அமைத்துக் கொடுத்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்த ஷவரில் யானை அபயாம்பிகை ஆனந்தமாக குளித்ததை கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.