பதிவு செய்த நாள்
15
டிச
2017
12:12
ஆட்டையாம்பட்டி: மார்கழி பெருவிழா, கம்பன் கழகம் சார்பில், ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், செங்குந்த முதலியார் மண்டபத்தில், வரும், 16 மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. அன்று, பேரளம் பேராசிரியர் அழகர் ராமானுஜம், ’ராமாயணம் தரும் வாழ்வியல்’ தலைப்பில் பேசுகிறார். தொடர்ந்து, ஜன., 3 வரை, மாலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, தினமும், ஒவ்வொரு தலைப்புகளில், ஜெகத் கஸ்பர், அரசு பரமேஸ்வரன், வேதசுப்பையா உள்ளிட்ட பல போராசிரியர்கள் பேசுகின்றனர்.